மரணதண்டனை,குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு வழங்கும் உச்சபட்ச தண்டனையாக உலகின் பல நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றது.எந்த ஒரு விஷயத்திலும் இரு வேறு கருத்துக்கள் இருக்கும்,மரணதண்டனையும் இதற்கு விதி விலக்கல்ல.இன்றைய உலகில் இது அவசியமானது, அவசியமற்றது என வாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
இன்றைய நிலையை ஒப்பிடும் போது 50,60 ஆண்டுகளுக்கு முன் வரை மரணதண்டனை மிக சாதரணமாக நடந்தேறியுள்ளது.சர்வாதிகாரத்தில் திளைத்த ஹிட்லர்,முசோலினி இடியமின்(சதாமையும் இதில் சேர்க்கலாம்) போன்றோரெல்லாம் மரணதண்டைனை வழங்குவதை ஒரு ஹாபியாகவே செய்துகொண்டிருந்தனர்.இவர்களுக்கு இந்த தீர்ப்பை கொடுக்க பெரிதாக காரணம் ஒன்றும் தேவைப்படவில்லை,தனக்கு பிடிக்காதவர் எவரேனும் தும்மினால் கூட,ஒரு வழக்கை ஜோடித்து ''ஜனநாயக முறை''ப்படி பல வகைகளில் சொர்க்கவாசலுக்கு டாட்டா சொல்லி அனுப்பிவிடுவர்.தூக்கிலிடுதல் சுட்டுதல்லுதல்,எலெக்ட்ரிக் ஷாக்,விஷம் கொடுப்பது,ஓபியம்(கஞ்ஜா மாதிரியான போதை வஸ்து) கொடுத்து சிறுக சிறுக கொல்வது,தலையை வெட்டுதல்,விஷபுகையை பரப்பி கொல்வது உயிர் போகும் வரை கல்லால் அடித்தே கொல்வது என பல முறைகளில் மரணதண்டனை கொடுக்கப்படுகிறது.இவற்றில் பெரும்பான்மையானவை இன்றும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரான் இராக், சவுதிஅரேபியா,பாகிஸ்தான்,சிரியா போன்ற நாடுகள் அதிக மரணதண்டை கொடுப்பதில் போட்டி போட்டுகொண்டு முன்னணியில் இருக்கின்றன.
இது போன்ற மிருகத்தனத்தை பார்த்து கொதித்த மனித உரிமையாளர்கள் மரணதண்டனையை கைவிட வேண்டுமென உலகமெங்கும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்,இன்றும் கொடுத்துகொண்டே இருக்கின்றனர்.இது ஒரு மூர்க்கத்தனமான செயல்,ஒரு அரசே தன் மக்களை கொல்லக்கூடாது,
கண்ணுக்கு கண்,கொலைக்கு கொலை எந்த விதத்திலும் தர்மம் ஆகாது,இப்படி செய்வதால் ஆத்திரத்திலும்,அறிவிழந்தும் குற்றம்செய்யும் குற்றவாளிக்கும்,நீதித்துறைக்கும் என்ன வித்தியாசம் என்பது இவர்களின் வாதம்.இவர்களின் தொடர் போராட்டங்களினால் இன்று நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அஹிம்சை நாடான இந்தியாவில் மரணதண்டனை இன்னும் வழக்கில் இருப்பது பல நாடுகளை ஆச்சர்யப்படுத்துகிறது.இந்தியாவை பொறுத்தவரை மரணதண்டனை தூக்கிலிடுதல் மூலமாக நடைமுறையில் உள்ளது.இந்தியாவின் முதல் தூக்குதண்டனை கைதி காந்தியை சுட்டு கொன்றதற்காக கோட்சேவிற்கு 1949 ல் நிறைவேற்றப்பட்டது.இதுவரை 53 பேர் இந்தியாவில் தூக்கிலிட பட்டுள்ளனர்.நம் தேசத்தை பொறுத்தவரை தூக்குதண்டை என்பது மிக மிக அரிதான வழக்குகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. 416 பேர் தீர்ப்பு பெற்று தூக்குமேடையை நோக்கி காத்திருக்கின்றனர்.இவர்களில் சிலர் 1990 களில் தீர்ப்பு பெற்று,கருணை மனு
எழுதி இன்னும் ஜனாதிபதியின் முடிவை எதிர்நோக்கியுள்ளனர்.பிரதிபா பாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் போது 30 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களின் தண்டனையை குறைத்துள்ளார்.
கொஞ்சம் யோசித்து பார்த்தல் மரணதண்டனை அவசியம் என்றே தோன்றுகிறது,எடுத்துக்காட்டாக இந்த 30 பேரில் கடவுளுக்கு பலி கொடுக்கிறேன் என்று 5 குழந்தைகளை கொன்றவன்,பணத்திற்காக 3 வயது சிறுவனை கடத்தி,சித்ரவதை செய்து கொன்றவன்,போதையில்
மனைவியை கொன்றுவிட்டு(மனதை இரும்பாக்கி கொள்ளுங்கள்) தன் சொந்த 10 வயது மகளையே கற்பழித்து கொன்றவன் ஆகியோரும் அடங்குவர்.இது போன்ற ஒவ்வொரு குற்றபின்னணியையும் பார்க்கையில் இவர்களை மன்னிப்பதே பாவம் ,மரணதண்டையும் தேவை என்றே மனம் சொல்கிறது.மும்பை தாக்குதலில் 200 மேற்பட்ட மக்களின் சாவுக்கு காரணமான கசாப்-ஐ தூக்கில் போட்டது எந்த விதத்தில் தவறு..அவனை ஜெயிலில் அடைத்து வேளா வேளைக்கு சோறு போட்டிருந்தால் தான் நியாயம் ஆகுமா..நாட்டையே குலுக்கிய டெல்லி மாணவி பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களின் மேல் கருணை காட்டலாமா..ஒரு உயிரை கொல்வது பாவம் என்றாலும்,உரிமையில்லை என்றாலும் வயலில் முளைத்திருக்கும் தேவையற்ற களையை பிடுங்கி எறிவதில் தவறேதும் இல்லை
என்றே தோன்றுகிறது.
ஒரு படத்தில் விவேக் சொல்வார்,''தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்" என்று..அவர் அதை நகைச்சுவை காட்சியில் சொல்லியிருந்தாலும் கொஞ்சம் சீரியசாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய வரி இது.
Source Links:
http://en.wikipedia.org/wiki/List_of_methods_of_capital_punishment
http://www.virakesari.lk/?q=node/359478
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121213_indiadeathrow.shtml
இன்றைய நிலையை ஒப்பிடும் போது 50,60 ஆண்டுகளுக்கு முன் வரை மரணதண்டனை மிக சாதரணமாக நடந்தேறியுள்ளது.சர்வாதிகாரத்தில் திளைத்த ஹிட்லர்,முசோலினி இடியமின்(சதாமையும் இதில் சேர்க்கலாம்) போன்றோரெல்லாம் மரணதண்டைனை வழங்குவதை ஒரு ஹாபியாகவே செய்துகொண்டிருந்தனர்.இவர்களுக்கு இந்த தீர்ப்பை கொடுக்க பெரிதாக காரணம் ஒன்றும் தேவைப்படவில்லை,தனக்கு பிடிக்காதவர் எவரேனும் தும்மினால் கூட,ஒரு வழக்கை ஜோடித்து ''ஜனநாயக முறை''ப்படி பல வகைகளில் சொர்க்கவாசலுக்கு டாட்டா சொல்லி அனுப்பிவிடுவர்.தூக்கிலிடுதல் சுட்டுதல்லுதல்,எலெக்ட்ரிக் ஷாக்,விஷம் கொடுப்பது,ஓபியம்(கஞ்ஜா மாதிரியான போதை வஸ்து) கொடுத்து சிறுக சிறுக கொல்வது,தலையை வெட்டுதல்,விஷபுகையை பரப்பி கொல்வது உயிர் போகும் வரை கல்லால் அடித்தே கொல்வது என பல முறைகளில் மரணதண்டனை கொடுக்கப்படுகிறது.இவற்றில் பெரும்பான்மையானவை இன்றும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரான் இராக், சவுதிஅரேபியா,பாகிஸ்தான்,சிரியா போன்ற நாடுகள் அதிக மரணதண்டை கொடுப்பதில் போட்டி போட்டுகொண்டு முன்னணியில் இருக்கின்றன.
இது போன்ற மிருகத்தனத்தை பார்த்து கொதித்த மனித உரிமையாளர்கள் மரணதண்டனையை கைவிட வேண்டுமென உலகமெங்கும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்,இன்றும் கொடுத்துகொண்டே இருக்கின்றனர்.இது ஒரு மூர்க்கத்தனமான செயல்,ஒரு அரசே தன் மக்களை கொல்லக்கூடாது,
கண்ணுக்கு கண்,கொலைக்கு கொலை எந்த விதத்திலும் தர்மம் ஆகாது,இப்படி செய்வதால் ஆத்திரத்திலும்,அறிவிழந்தும் குற்றம்செய்யும் குற்றவாளிக்கும்,நீதித்துறைக்கும் என்ன வித்தியாசம் என்பது இவர்களின் வாதம்.இவர்களின் தொடர் போராட்டங்களினால் இன்று நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அஹிம்சை நாடான இந்தியாவில் மரணதண்டனை இன்னும் வழக்கில் இருப்பது பல நாடுகளை ஆச்சர்யப்படுத்துகிறது.இந்தியாவை பொறுத்தவரை மரணதண்டனை தூக்கிலிடுதல் மூலமாக நடைமுறையில் உள்ளது.இந்தியாவின் முதல் தூக்குதண்டனை கைதி காந்தியை சுட்டு கொன்றதற்காக கோட்சேவிற்கு 1949 ல் நிறைவேற்றப்பட்டது.இதுவரை 53 பேர் இந்தியாவில் தூக்கிலிட பட்டுள்ளனர்.நம் தேசத்தை பொறுத்தவரை தூக்குதண்டை என்பது மிக மிக அரிதான வழக்குகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. 416 பேர் தீர்ப்பு பெற்று தூக்குமேடையை நோக்கி காத்திருக்கின்றனர்.இவர்களில் சிலர் 1990 களில் தீர்ப்பு பெற்று,கருணை மனு
எழுதி இன்னும் ஜனாதிபதியின் முடிவை எதிர்நோக்கியுள்ளனர்.பிரதிபா பாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் போது 30 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களின் தண்டனையை குறைத்துள்ளார்.
கொஞ்சம் யோசித்து பார்த்தல் மரணதண்டனை அவசியம் என்றே தோன்றுகிறது,எடுத்துக்காட்டாக இந்த 30 பேரில் கடவுளுக்கு பலி கொடுக்கிறேன் என்று 5 குழந்தைகளை கொன்றவன்,பணத்திற்காக 3 வயது சிறுவனை கடத்தி,சித்ரவதை செய்து கொன்றவன்,போதையில்
மனைவியை கொன்றுவிட்டு(மனதை இரும்பாக்கி கொள்ளுங்கள்) தன் சொந்த 10 வயது மகளையே கற்பழித்து கொன்றவன் ஆகியோரும் அடங்குவர்.இது போன்ற ஒவ்வொரு குற்றபின்னணியையும் பார்க்கையில் இவர்களை மன்னிப்பதே பாவம் ,மரணதண்டையும் தேவை என்றே மனம் சொல்கிறது.மும்பை தாக்குதலில் 200 மேற்பட்ட மக்களின் சாவுக்கு காரணமான கசாப்-ஐ தூக்கில் போட்டது எந்த விதத்தில் தவறு..அவனை ஜெயிலில் அடைத்து வேளா வேளைக்கு சோறு போட்டிருந்தால் தான் நியாயம் ஆகுமா..நாட்டையே குலுக்கிய டெல்லி மாணவி பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களின் மேல் கருணை காட்டலாமா..ஒரு உயிரை கொல்வது பாவம் என்றாலும்,உரிமையில்லை என்றாலும் வயலில் முளைத்திருக்கும் தேவையற்ற களையை பிடுங்கி எறிவதில் தவறேதும் இல்லை
என்றே தோன்றுகிறது.
ஒரு படத்தில் விவேக் சொல்வார்,''தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்" என்று..அவர் அதை நகைச்சுவை காட்சியில் சொல்லியிருந்தாலும் கொஞ்சம் சீரியசாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய வரி இது.
Source Links:
http://en.wikipedia.org/wiki/List_of_methods_of_capital_punishment
http://www.virakesari.lk/?q=node/359478
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121213_indiadeathrow.shtml

