ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது நியூட்டனின் 3ம் விதி மட்டுமல்ல, வாழ்க்கையின் பொதுவான தத்துவமும் கூட. இதில் நாம் பார்க்க போகும் நிகழ்வு கூட ஒரு தவறான முடிவின் விளைவு எப்படி அமையும் என்பதைத்தான்.
1957. சீனா தன்னை ஒரு கம்யூனிச நாடாக நிறம் மாற்றிக் கொண்டிருந்த காலம். மாவோ அதிபராக இருந்தார். கம்யூனிச தலைவர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவரின் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. ஆம் 'மாவோயிஸ்ட்' என்ற தீவிரவாத அமைப்பின் பெயர் இவரின் திருநாமத்தில் இருந்து தோன்றியதுதான்.
1950களில் சீனா பல்வேறு துறைகளில் பின் தங்கியே இருந்தது. அதில் முக்கியமான ஒன்று விவசாயம்,உணவு உற்பத்தி. இவ்வளவு பெரிய நாடு சாப்பாட்டிற்கு அடுத்த நாட்டை எதிர் பார்த்துக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும். பலமாக சிந்தித்தார் மாவோ. விவாசாயத்தில் சீனா இன்னும் வளர்ச்சி அடையாத காரணத்தை அறிய அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்தார். அவர்களும் அதிபர் கேட்கிறாரே என்று ஒரு பட்டியலை தயாரித்து மாவோ விடம் கொடுத்தனர். அதில் பல காரணங்கள் இருந்தாலும் ஒரு நூதனமான காரணம் அவரின் புருவத்தை உயர செய்தது. அது யாதெனில், ' ஒரு சிட்டுக்குருவி ஒரு நாளைக்கு 12 கிராம் தானியத்தை சாப்பிடுகிறது, இதுவே வருடத்திற்கு ஒரு குருவிக்கு கிட்டத்ட்ட 4.5 கிலோ தானியம் தேவைப்படுகிறது. இதன் படி பார்த்தால் வருடம் முழுதும் 66000 பேருக்கு தேவையான உணவை சீனாவின் மொத்த குருவிகளும் அபேஸ் செய்துவிடுகிறது’. படித்ததில் பிடித்தது என்று இதை குறித்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார் மாவோ.
சில நாட்கள் கழித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டார் மாவோ. " நம் நாட்டில் விவசாயம் செழிப்பாக இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் சிட்டுக்குருவிகள் தான். உற்பத்தி செய்வதில் ஒரு பகுதியை இவைகளே தின்றுவிட்டால் நாம் என்ன செய்வது? நாட்டின் எதிர்காலம் தான் என்னவாகும்? நாம் கஷ்டப்பட்டு விவசாயம் செய்வது நமக்காக தான், இங்குள்ள குருவிகளுக்கு அல்ல. அதனால் நாம் ஒரு புரட்சிக்கு தயார் ஆக வேண்டும். நமது உணவு உற்பத்தியை தடுக்கும் சிட்டுக்குருவிகள் அழித்துவிடுங்கள். என்ன செய்வீர்களோ எப்படி கொல்வீர்களோ எனக்கு தெரியாது. இன்னும் ஒரு சில மாதங்களில் சிட்டுக்குருவி என்றொரு இனமே இங்கு இருக்க கூடாது. முடிந்தால் கண்ணில் பட்ட எலிகளையும் கொல்லுங்கள். இதில் விவசாயிகள் மட்டுமின்றி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரின் ஒத்துழைப்பயும் எதிர்பார்க்கிறேன்” மூச்சு விடாமல் பேசி முடித்தார் மாவோ. வரலாற்றில் இதை “The Great Sparrow Campaign ” என்று அழைக்கப்படுகிறது. பின்னாளில் கோடிக்கணக்கான மக்களின் சாவுக்கு முன்னுரையாக இந்த அறிவிப்பு இருக்குமென்று அப்போது யாரும் அறியவில்லை.
சீனாவில் உள்ள குருவிகளுக்கு ஏழரை ஆரம்பித்தது. மாவோ எதிர்ப்பார்த்ததை விட மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்ணில் பட்ட குருவிகளை எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர். குருவிக்கூடுகளை பிய்த்து எறிந்தனர். முட்டைகள் அழிக்கப்பட்டது. வலைகளில் கூட்டம் கூட்டமாக பொறி வைத்துபிடித்து கொல்லப்பட்டது. உண்டி வில் கொண்டு அடிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுடப்பட்டது. ஊரில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்றாக திரண்டு ராட்சச மேளம் அடித்து இரைச்சல் ஒலிகளை எழுப்புவர். சத்தம் தாங்கமுடியாமல் குருவிகள் கூட்டமாக பறக்கும். பயத்தில் கீச்சிட்டு வட்டமடித்து கொண்டே இருக்கும். தரை இறங்க விடாமல் மக்கள் அதனை விரட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் களைப்படைந்து வலுவில்லாமல் சுருண்டு விழுந்து சாகும். இறந்த குருவிகளை லாரி லாரி அனுப்பி ஊருக்கு வெளியே புதைத்து விடுவார்கள். இது போன்ற நிகழ்வுகள் மக்களின் தினசரி ஹாபியாகவே மாறிப்போனது.இப்படி ஒரு நாள் இல்லை இரண்டு நாட்கள் இல்லை, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இந்த the great sparrow campaign வெற்றிகரமாக நடந்தது. சுமார் 75 மில்லியன் குருவிகள் அழிக்கப்பட்டன. (Refer the video below).
அப்பாடா குருவிகள் தொல்லை இனி இல்லை , விவசாயம் கொடிகட்டி பொறக்க போகிறது சீனாவில் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்புரட்சின் விளைவுகள் 1960ல் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்தது. எதிர்ப்பார்த்தற்கு நேர் எதிராக விவசாயத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது சீனா. நல்ல மழை இருந்தும் பயிர்கள் செத்து மடிந்தன. பின்னர் தான் அரசுக்கும் மக்களுக்கும் உரைத்தது, குருவிகள் தானியத்தை மட்டும் தின்னவில்லை, வயலில் உள்ள பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்றவைகளையும் சேர்த்தே உண்ணும் என்று. இப்போது குருவிகள் இல்லாததால் பூச்சிகளின் பெருக்கம் பன்மடங்கு உயர்ந்தது. விளையும் பயிர்களை கூட்டம் கூட்டமாக சர்வநாசம் செய்தன. எவ்வளவு முயற்சி செய்தும் பயிர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
விளைவு, சீனாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. விலைவாசி மிகக்கடுமையாக அதிகரித்தது. அடுத்த வேளை உணவுக்காக மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தன் முட்டாள் தனமான முடிவால் மக்கள் கொத்து கொத்தாக மடிவதை மாவோவால் தடுக்கமுடியவில்லை. பசி தாங்கமுடியாமல் பல பேர் தற்கொலை செய்துகொண்டனர். அடுத்த இரண்டு வருடங்களில் பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 45 மில்லியனை தொட்டது. இது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை தான். நிஜத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கும். வேறு வழியின்றி சிட்டுக்குருவிகளை பல நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்பட்டது. The Great Sparrow campaign ஆக ஆரம்பித்தது The Great Famine ஆக முடிந்தது.
இயற்கைக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மனிதர்களால் தாங்க முடியாத விளைவினை கொடுக்கும் என்பதற்கு இது ஒரு ஆகச்சிறந்த உதாரணம். 2.O படத்தில் சொல்வது போல தான். "இங்க மனுஷங்க உயிரோட இருக்கணும்னா பறவைகளும் இருக்கணும்" "The World is not just for human".
புல்லினங்கால் ! புல்லினினங்கால்!!
-மணி
1957. சீனா தன்னை ஒரு கம்யூனிச நாடாக நிறம் மாற்றிக் கொண்டிருந்த காலம். மாவோ அதிபராக இருந்தார். கம்யூனிச தலைவர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவரின் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. ஆம் 'மாவோயிஸ்ட்' என்ற தீவிரவாத அமைப்பின் பெயர் இவரின் திருநாமத்தில் இருந்து தோன்றியதுதான்.
1950களில் சீனா பல்வேறு துறைகளில் பின் தங்கியே இருந்தது. அதில் முக்கியமான ஒன்று விவசாயம்,உணவு உற்பத்தி. இவ்வளவு பெரிய நாடு சாப்பாட்டிற்கு அடுத்த நாட்டை எதிர் பார்த்துக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும். பலமாக சிந்தித்தார் மாவோ. விவாசாயத்தில் சீனா இன்னும் வளர்ச்சி அடையாத காரணத்தை அறிய அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்தார். அவர்களும் அதிபர் கேட்கிறாரே என்று ஒரு பட்டியலை தயாரித்து மாவோ விடம் கொடுத்தனர். அதில் பல காரணங்கள் இருந்தாலும் ஒரு நூதனமான காரணம் அவரின் புருவத்தை உயர செய்தது. அது யாதெனில், ' ஒரு சிட்டுக்குருவி ஒரு நாளைக்கு 12 கிராம் தானியத்தை சாப்பிடுகிறது, இதுவே வருடத்திற்கு ஒரு குருவிக்கு கிட்டத்ட்ட 4.5 கிலோ தானியம் தேவைப்படுகிறது. இதன் படி பார்த்தால் வருடம் முழுதும் 66000 பேருக்கு தேவையான உணவை சீனாவின் மொத்த குருவிகளும் அபேஸ் செய்துவிடுகிறது’. படித்ததில் பிடித்தது என்று இதை குறித்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார் மாவோ.
Mao Zedong |
சீனாவில் உள்ள குருவிகளுக்கு ஏழரை ஆரம்பித்தது. மாவோ எதிர்ப்பார்த்ததை விட மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்ணில் பட்ட குருவிகளை எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர். குருவிக்கூடுகளை பிய்த்து எறிந்தனர். முட்டைகள் அழிக்கப்பட்டது. வலைகளில் கூட்டம் கூட்டமாக பொறி வைத்துபிடித்து கொல்லப்பட்டது. உண்டி வில் கொண்டு அடிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுடப்பட்டது. ஊரில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்றாக திரண்டு ராட்சச மேளம் அடித்து இரைச்சல் ஒலிகளை எழுப்புவர். சத்தம் தாங்கமுடியாமல் குருவிகள் கூட்டமாக பறக்கும். பயத்தில் கீச்சிட்டு வட்டமடித்து கொண்டே இருக்கும். தரை இறங்க விடாமல் மக்கள் அதனை விரட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் களைப்படைந்து வலுவில்லாமல் சுருண்டு விழுந்து சாகும். இறந்த குருவிகளை லாரி லாரி அனுப்பி ஊருக்கு வெளியே புதைத்து விடுவார்கள். இது போன்ற நிகழ்வுகள் மக்களின் தினசரி ஹாபியாகவே மாறிப்போனது.இப்படி ஒரு நாள் இல்லை இரண்டு நாட்கள் இல்லை, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இந்த the great sparrow campaign வெற்றிகரமாக நடந்தது. சுமார் 75 மில்லியன் குருவிகள் அழிக்கப்பட்டன. (Refer the video below).
அப்பாடா குருவிகள் தொல்லை இனி இல்லை , விவசாயம் கொடிகட்டி பொறக்க போகிறது சீனாவில் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்புரட்சின் விளைவுகள் 1960ல் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்தது. எதிர்ப்பார்த்தற்கு நேர் எதிராக விவசாயத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது சீனா. நல்ல மழை இருந்தும் பயிர்கள் செத்து மடிந்தன. பின்னர் தான் அரசுக்கும் மக்களுக்கும் உரைத்தது, குருவிகள் தானியத்தை மட்டும் தின்னவில்லை, வயலில் உள்ள பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்றவைகளையும் சேர்த்தே உண்ணும் என்று. இப்போது குருவிகள் இல்லாததால் பூச்சிகளின் பெருக்கம் பன்மடங்கு உயர்ந்தது. விளையும் பயிர்களை கூட்டம் கூட்டமாக சர்வநாசம் செய்தன. எவ்வளவு முயற்சி செய்தும் பயிர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
விளைவு, சீனாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. விலைவாசி மிகக்கடுமையாக அதிகரித்தது. அடுத்த வேளை உணவுக்காக மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தன் முட்டாள் தனமான முடிவால் மக்கள் கொத்து கொத்தாக மடிவதை மாவோவால் தடுக்கமுடியவில்லை. பசி தாங்கமுடியாமல் பல பேர் தற்கொலை செய்துகொண்டனர். அடுத்த இரண்டு வருடங்களில் பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 45 மில்லியனை தொட்டது. இது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை தான். நிஜத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கும். வேறு வழியின்றி சிட்டுக்குருவிகளை பல நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்பட்டது. The Great Sparrow campaign ஆக ஆரம்பித்தது The Great Famine ஆக முடிந்தது.
இயற்கைக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மனிதர்களால் தாங்க முடியாத விளைவினை கொடுக்கும் என்பதற்கு இது ஒரு ஆகச்சிறந்த உதாரணம். 2.O படத்தில் சொல்வது போல தான். "இங்க மனுஷங்க உயிரோட இருக்கணும்னா பறவைகளும் இருக்கணும்" "The World is not just for human".
புல்லினங்கால் ! புல்லினினங்கால்!!
-மணி