Sunday, September 22, 2013

கி.பி ஒன்று முதல் இன்று வரை-Part III (The End)

ஐரோப்பா முழுவதும் சிறு சிறு கூட்டமாக பரவி வேரூன்றிய யூதர்கள் தங்களது அறிவாலும் முயற்சியாலும் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்தனர்.ஆனால் ஒன்றை அவர்கள் மறந்தே போய்விட்டார்கள்,அது தான் அவர்களது புராதன மொழியாகிய ஹீப்ரு.பல்வேறு நாடுகளில் குடியேறி,அங்கேயே பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்து வந்ததால் அந்தந்த வட்டார மொழியையே பேசி வந்தனர்.கிட்டத்தட்ட ஹீப்ரு அழிந்தேபோய்விட்டிருந்தது.ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் பரவியிருந்த அனைத்து யூதர்களும் தொடர்பில் இருக்க ஒரு பொதுவான மொழி ஒன்று தேவை என்பதை கொஞ்சம் தாமதமாகவே உணர ஆரம்பித்தனர்.
புராணத்தில் இறந்தர்வர்கள் கூட மீண்டும் பிழைத்ததுண்டு,ஆனால் அழிந்து போன ஒரு மொழி மீண்டும் வழக்கத்திற்கு வந்ததாக எந்த ஒரு வரலாறும் இல்லை.இந்த சாதைனையை செய்து காட்டியவர்கள் யூதர்கள்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கொடிந்த மொழியை மீண்டும் தோண்டிஎடுத்தனர்.பழங்கால புத்தகங்கள்,புராணங்களை கொண்டு மீண்டும் ஹீப்ருவுக்கு உயிரூட்டினர்.'கில்லி' படத்துல ஒரு வசனம் வரும்,விஜய் த்ரிஷாவிடம் சொல்வார், "என்ன பொறுத்த வரைக்கும் எறங்கிட்டா ஜெய்க்கணும்,ஜெய்ச்சே ஆகணும்".இது யூதர்களுக்கு மிக சரியாக பொருந்தும்.இது சாத்தியமா முடியுமா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை,அது தான் அவர்களின் குணம்.மெல்ல மெல்ல உயிர் பெற்று,எழுத்து வடிவம் பெற்று உலாவ தொடங்கியது ஹீப்ரூ.இன்று இஸ்ரேலில் தேசிய மொழியே ஹீப்ரூ தான்.
ஹீப்ரூ அவர்களது (அறிவு)போராட்ட வேகத்தை அதிகரித்தது.அதன் விழைவு தான் நில வங்கி திட்டம்.

நில வங்கி :

முதன் முதலில் வங்கி முறையை உலகிற்கு அறிமுகபடுத்திய பெருமை இவர்களையே சாரும்.இஸ்ரேலை உருவாக்கவேண்டுமானால் அந்த நாட்டில் பெரும்பான்மையான யூதர்கள் வேண்டும்,ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் பரவியுள்ள யூதர்கள் வர தயார் தான்,ஆனால் தங்க வீடும்,வீடுகட்ட நிலமும் வேண்டுமல்லவா,என்ன செய்யலாம் என மூளையை குடைந்தனர்.பெரும் பணக்கார யூதர்கள் இணைந்து இஸ்ரேலில் வங்கியை தொடங்கினர்,நிலத்தின் மேல் லோன் கொடுக்க ஆரம்பித்தார்கள்,கடன் வாங்கவா ஆளில்லை,ஏகப்பட்ட மக்கள் தங்கள் நிலத்தை வைத்து கடன் வாங்கினர்(அப்போது இஸ்ரேலில் 95% கிறிஸ்துவர்கள் மற்றும்  முஸ்லிம்களே இருந்தனர்).ஒன்றுக்கும் உதவாத பாலைவன நிலத்திற்கு ஏன் இவர்கள் இவ்வளவு கடன் குடுக்கிறார்கள் என்றெல்லாம் அவர்கள் சிந்திக்காதது சோகம் தான்.வட்டி கணக்கெல்லாம் அந்த பாமர மக்களுக்கு புரியவில்லை,கடனை திருப்பி செலுத்த முடியாமல் நிலத்தை இழந்தனர்,மேலும் வங்கி தனியாக சும்மா கிடந்த நிலத்தையெல்லாம் விலைக்கு வாங்கியது,கால் இஞ்ச் நிலம் கிடைத்தாலும் விடவில்லை.இதன் மூலம் கிடைத்த நிலத்தையெல்லாம் யூதர்களுக்கு மட்டுமே விற்றனர்,மீண்டும் தங்கள் தேசத்திற்கு குடிபெயர ஆரம்பித்தனர்,அவர்களின் ஆனந்த கண்ணீரில் பாலைவனமும் சற்று ஈரமாகித்தான் போனது .2000 வருட கனவல்லவா இது .யூதர்களின் திட்டம் இது தான் என்று நிலத்தை விற்ற மக்களுக்கு தெரியும்போது அனைத்தும் கையைவிட்டு போயிருந்தது.

இஸ்ரேல் உதயம் :

பல போராட்டங்களை கடந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆதரவுடன் மே 14,1948 அன்று இஸ்ரேல் உருவானது.யூதமக்களின் அறிவாலும் தொடர் முயற்சியாலும் கிடைத்த சுதந்திரத்தை நன்றாக பயன்படுத்தி இன்று இஸ்ரேலை வல்லரசாக உருவாக்கியுள்ளனர்.ஒருவேளை இவர்கள் ஆயுதத்தை மட்டுமே நம்பி போராடிஇருந்தால் யூத இனம் என்றோ அழிந்திருக்கும்,அவர்கள் பயன்படுத்தியது கத்தியுடன் புத்தியையும்,பொறுமையையும்.

குறிப்பு : எந்த ஒரு மதத்தையும் குறைகூற வேண்டும் என்றோ ,ஒரு மதத்தை உயர்த்தி கூற வேண்டும் என்றோ  இந்த தொடரை நான் எழுதவில்லை.போராடி வென்ற ஒரு இனத்தின் உண்மை வரலாறே இது.ஆதலால் அதன் சம்பந்த பட்ட மொழி,நாடு,மதம் ஆகியவற்றை கூறுவது அவசியம் என்று கருதியே மதங்களின் பெயரை குறிப்பிடவேண்டியதாயிற்று.
இத்துடன் "கி.பி  ஒன்று முதல் இன்று வரை" முடிவடைகின்றது.இதை படித்த அனைவருக்கும் எனது நன்றிகள் .         

**எழுத்து: மணி மாணிக்கம் **
                                                               


Sunday, September 15, 2013

கி .பி: ஒன்று முதல் இன்று வரை- Part II

இயேசுவை சிலுவையில் அறைந்தாகிவிட்டது,இனி  நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று யூதர்களால்  நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை.இயேசுவின் மரணத்தினால் மக்களிடையே அனுதாப அலை பலமாக வீ சியது,தவிர  யூத ஆட்சியாளர்களிடம் இருந்த உட்கட்சி பூசல் காரணமாக  ஆட்சியின் மக்கள் மீது நம்பிக்கை இழந்தனர்.

பரவிய கிறிஸ்துவம்




கிறிஸ்துவம் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது,கிறிஸ்துவ பாதிரியார்கள் இந்த பொறுப்பை ஏற்றுகொண்டனர்.கண்ணில் பட்ட எவரிடமும் இயேசு,கிறிஸ்துவத்தின் பெருமையை சொல்லி தன பக்கம் கொண்டுவர முயன்றனர்.ஆனால் இதில் ஆபத்தும் இருந்தது,ஐரோப்பாவில் இரண்டு பாதிரியார்களை தீயிட்டு கொளுத்தினர் (சென்னையில் கிறிஸ்துவத்தை பரப்பவந்த தாமஸ் என்பவருக்கும் இதே முடிவு என்பது தான் சோகம்,அவரது நினைவாகவே St.Thomas Mount இன்று சென்னையில் உள்ளது).பல தடைகளை தாண்டி ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் கிறிஸ்துவம் ஆழமாக வேருன்றியது.இதனிடையே யூதர்கள் தமது ஆட்சி,அதிகாரத்தை இழந்தனர்,அனைத்தும் கிறிஸ்துவர்கள் வசமாகிபோனது.

அடிமை அகதிகள்


100,150 ஆண்டுகளில் தன் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல ஆனார்கள்,யூதர்களின் பாடசாலை,தேவாலயங்கள்,நூலகங்கள் இடிக்கப்பட்டன,இதை எந்த ஹீரோவும் அப்போது தட்டி கேட்கமுடியவில்லை,அப்படியே கேட்டாலும் அவனுக்கு பரிசு எமலோகம் தான்,மன்னிக்கவும் தேவலோகம் தான் .யூதர்களின் பலமே அவர்களது மனஉறுதியும் பொறுமையும் தான்,அடங்கி வாழ்ந்தார்களே தவிர முடங்கிவிடவில்லை.வீட்டிலேயே கல்வியை வளர்த்தனர்,தொழுதனர்.இதை கண்ட ஆட்சியாளர்களுக்கு பத்திகொண்டு எரிந்தது,இதனால் கிறிஸ்துவத்துக்கு மாற அனைவரையும் கட்டாய படுத்தினார்கள்,மாறாதவர்கள் நாட்டை விட்டுதுரத்தினர்.

சொத்து, வீடு என தன் உடைமைகளை விட்டு அகதிகளாக ஓடினார்கள் (பசியினாலே லட்சக்கணக்கானோர் இறந்ததாக மேற்கத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன)..வார்த்தைகளால் விவரிக்கமுடியாத சோகமிது.சென்ற இடத்திலும் இதே நிலை தான்,அங்கும் விரட்டினார்கள் மீண்டும் ஓட்டம்..ஒன்று கிறிஸ்துவனாக மாற வேண்டும் இல்லை ஓடவேண்டும்,இது தான் அப்போது யூதர்களின் நிலை.ஒன்றாக இருப்பது ஆபத்து என்று சிறு சிறு கூட்டமாக பிரிந்து ஐரோப்பா முழுவதும் பரவினார்கள் யூதர்கள்.சிறிய கூட்டம் தானே இவர்கள் என்ன செய்துவிடபொகிறார்கள் என நினைத்த அந்தந்த நாட்டு மக்களும் அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.இதற்குள் கிட்டத்தட்ட 10நூற்றாண்டுகள் ஓடிவிட்டது.

காலங்கள் ஓடினாலும் யூதர்களின் மனது தன் சொந்த தேசமான ஜெருசலமை அடைவதிலேயே இருந்தது .பரம்பரை பரம்பரையாக வாரிசுகளுக்கு தன் இனத்தை பற்றியும் ஜெருசலத்தை பற்றியும் கதையாக சொல்லி விதைத்துவந்தனர்(இதன் அடிப்படையிலேயே ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்ததாக செல்வ ராகவனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்).பல தேசங்களில் பிரிந்து வாழ்ந்தாலும்,பல நூறு  ஆண்டுகள்  தகவல் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் ''நாம் யூதர்கள்,மீண்டும் நமக்கு ஜெருசலம்'' என்ற நோக்கத்தில் சிறிதும் மாறவில்லை என்பது மூக்கின்மேல் விரல் வைக்க வைக்கும் ஆச்சர்யம்தான்.                                 

விருட்சமாகிய விதை,ஒரு தேசத்தையே விலைக்கு வாங்கிய யூதர்கள்..அடுத்த பதிவில் பார்ப்போம் .நன்றி.
**எழுத்து: மணி மாணிக்கம்**                                          


Thursday, September 12, 2013

கி .பி: ஒன்று முதல் இன்று வரை

ஒரு இனம், தனக்காக ஒரு அரசு ,தனக்காக ஒரு மொழி ,ஒரு சுதந்திர நாடு இவற்றை அடைய கிட்டத்தட்ட 1900 ஆண்டுகள் போராடி வென்றுள்ளார்கள் என்றால் சற்று ஆச்சர்யமாகவே இருக்கும் ..அந்த அதிசய இனம் தான் யூதர்கள் (Hebrews ),அந்த சுதந்திர நாடுதான் இஸ்ரேல் .யூதர்கள் என்றாலே எதோ வெறுக்கக்கூடியவர்கள் என்பது போன்ற கசப்புணர்ச்சி இன்றும் பலர் மனதில் தோன்றுவதுண்டு .இதன் காரணத்தின் ஆணிவேரை அறிய வேண்டுமானால்  2013 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும் .

கி .பி ஒன்று:
அப்போது ஹெராத் என்ற யூத மன்னன் ஜெருசலத்தை ஆண்டுவந்தான்.அவன் பாட்டுக்கு ஜாலியாக ஆட்சி செய்து வந்தவனிடம் யூத குருமார்கள் சிலர் ஒரு அதிசய குழந்தையால் தங்கள் மணிமுடிக்கு ஆபத்து வரும் என்றும் ,அக்குழந்தை பின்னாளில் உலகை ஆளும் 'தலைவா' வாக மாறுவான் என்றும் பத்தவைத்தனர் .இதனால் பயந்த ஹெராத் மன்னன் ஒரு நல்ல நாளில் அந்த நகரில் இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொன்றான்.இங்கு தான் விதி விளையாடியது,அதாவது அந்த குறிப்பிட்ட குழந்தை மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டது.


அந்த குழந்தையின் பெயர் 'ஜோஷ்வா'..,'இயேசு' என்றால் சட்டென தெரியும்.அவனது பெற்றோர்கள் ஜோஸ்வாவை தூக்கிக்கொண்டு எகிப்துக்கு தப்பி சென்று விட்டனர்.பின் ஹெராத் இறந்த பின் தான் ஜெருசலத்திற்கு திரும்பினர்.அப்போது இயேசுவிற்கு வயது எட்டு.இயேசுவின் புதிய,மாறுபட்ட கருத்துக்கள்,அவரது சில மாய செயல்களால் அவரது புகழ் ஒரு புறம் பரவினாலும் மறு புறம் இவர் யூத மதத்தை அழிக்க வந்தவர் ,எதிரானவர் என்று யூதர்கள் மனதில் ஆழமாக பதிந்தது.இதனால் பல சூழ்ச்சிகள் செய்து பொய் குற்றம் சாட்டி அவருக்கு மரணதண்டனை அளித்தனர் யூத குருக்களும் பிலாத்து*  மன்னனும்.அப்பொழுது இயேசுவிற்கு வயது 33.

இந்த ஒரு மரணம் தான் மொத்த ஐரோப்பிய ,மத்திய கிழக்காசிய நாடுகளில் அடுத்த 1900 ஆண்டுகள் யூதர்கள் படப்போகும் துயரங்களுக்கான விதை.'இறைவனால் 
அருளப்பட்ட மதம்' என்ற பெயரிலிருந்து 'இயேசுவை கொன்ற மதம் ' என பெயர்பெற்ற யூதர்களின் நாடோடி வாழ்க்கை ,போராட்டம் ,இறுதியில் பெற்ற வெற்றி இவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.

* பிலாத்து கி .பி 26 முதல் கி .பி 36 வரை  ரோமின்(Rome) மன்னராக ஆட்சி செய்து வந்தவர்.இவரது பெயர் இன்றும் வரலாற்றில் நிற்க ஒரே காரணம் இயேசுவிற்கு மரணதண்டனை அளித்ததனாலேதான்.
உண்மையில் இவர் தன் மனதார இந்த தீர்ப்பை இயேசுவிற்கு வழங்கவில்லை,யூத குருமார்களின் டார்ச்சர் அப்படி.(அரசனாகவே இருந்தாலும் யூத குருக்களின் முன் கப்சிப் என்று தான் இருக்கவேண்டுமாம்!).           

 இப்பதிவை பற்றிய  உங்கள் கருத்துக்களை Comment செய்யவும்.நன்றி.

  *****எழுத்து: மணி மாணிக்கம்*****.