Sunday, September 15, 2013

கி .பி: ஒன்று முதல் இன்று வரை- Part II

இயேசுவை சிலுவையில் அறைந்தாகிவிட்டது,இனி  நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று யூதர்களால்  நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை.இயேசுவின் மரணத்தினால் மக்களிடையே அனுதாப அலை பலமாக வீ சியது,தவிர  யூத ஆட்சியாளர்களிடம் இருந்த உட்கட்சி பூசல் காரணமாக  ஆட்சியின் மக்கள் மீது நம்பிக்கை இழந்தனர்.

பரவிய கிறிஸ்துவம்




கிறிஸ்துவம் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது,கிறிஸ்துவ பாதிரியார்கள் இந்த பொறுப்பை ஏற்றுகொண்டனர்.கண்ணில் பட்ட எவரிடமும் இயேசு,கிறிஸ்துவத்தின் பெருமையை சொல்லி தன பக்கம் கொண்டுவர முயன்றனர்.ஆனால் இதில் ஆபத்தும் இருந்தது,ஐரோப்பாவில் இரண்டு பாதிரியார்களை தீயிட்டு கொளுத்தினர் (சென்னையில் கிறிஸ்துவத்தை பரப்பவந்த தாமஸ் என்பவருக்கும் இதே முடிவு என்பது தான் சோகம்,அவரது நினைவாகவே St.Thomas Mount இன்று சென்னையில் உள்ளது).பல தடைகளை தாண்டி ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் கிறிஸ்துவம் ஆழமாக வேருன்றியது.இதனிடையே யூதர்கள் தமது ஆட்சி,அதிகாரத்தை இழந்தனர்,அனைத்தும் கிறிஸ்துவர்கள் வசமாகிபோனது.

அடிமை அகதிகள்


100,150 ஆண்டுகளில் தன் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல ஆனார்கள்,யூதர்களின் பாடசாலை,தேவாலயங்கள்,நூலகங்கள் இடிக்கப்பட்டன,இதை எந்த ஹீரோவும் அப்போது தட்டி கேட்கமுடியவில்லை,அப்படியே கேட்டாலும் அவனுக்கு பரிசு எமலோகம் தான்,மன்னிக்கவும் தேவலோகம் தான் .யூதர்களின் பலமே அவர்களது மனஉறுதியும் பொறுமையும் தான்,அடங்கி வாழ்ந்தார்களே தவிர முடங்கிவிடவில்லை.வீட்டிலேயே கல்வியை வளர்த்தனர்,தொழுதனர்.இதை கண்ட ஆட்சியாளர்களுக்கு பத்திகொண்டு எரிந்தது,இதனால் கிறிஸ்துவத்துக்கு மாற அனைவரையும் கட்டாய படுத்தினார்கள்,மாறாதவர்கள் நாட்டை விட்டுதுரத்தினர்.

சொத்து, வீடு என தன் உடைமைகளை விட்டு அகதிகளாக ஓடினார்கள் (பசியினாலே லட்சக்கணக்கானோர் இறந்ததாக மேற்கத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன)..வார்த்தைகளால் விவரிக்கமுடியாத சோகமிது.சென்ற இடத்திலும் இதே நிலை தான்,அங்கும் விரட்டினார்கள் மீண்டும் ஓட்டம்..ஒன்று கிறிஸ்துவனாக மாற வேண்டும் இல்லை ஓடவேண்டும்,இது தான் அப்போது யூதர்களின் நிலை.ஒன்றாக இருப்பது ஆபத்து என்று சிறு சிறு கூட்டமாக பிரிந்து ஐரோப்பா முழுவதும் பரவினார்கள் யூதர்கள்.சிறிய கூட்டம் தானே இவர்கள் என்ன செய்துவிடபொகிறார்கள் என நினைத்த அந்தந்த நாட்டு மக்களும் அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.இதற்குள் கிட்டத்தட்ட 10நூற்றாண்டுகள் ஓடிவிட்டது.

காலங்கள் ஓடினாலும் யூதர்களின் மனது தன் சொந்த தேசமான ஜெருசலமை அடைவதிலேயே இருந்தது .பரம்பரை பரம்பரையாக வாரிசுகளுக்கு தன் இனத்தை பற்றியும் ஜெருசலத்தை பற்றியும் கதையாக சொல்லி விதைத்துவந்தனர்(இதன் அடிப்படையிலேயே ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்ததாக செல்வ ராகவனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்).பல தேசங்களில் பிரிந்து வாழ்ந்தாலும்,பல நூறு  ஆண்டுகள்  தகவல் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் ''நாம் யூதர்கள்,மீண்டும் நமக்கு ஜெருசலம்'' என்ற நோக்கத்தில் சிறிதும் மாறவில்லை என்பது மூக்கின்மேல் விரல் வைக்க வைக்கும் ஆச்சர்யம்தான்.                                 

விருட்சமாகிய விதை,ஒரு தேசத்தையே விலைக்கு வாங்கிய யூதர்கள்..அடுத்த பதிவில் பார்ப்போம் .நன்றி.
**எழுத்து: மணி மாணிக்கம்**                                          


Close [x]